ஐந்நூறு பயிர்க் கன்றுகளை நடும் வேலைத் திட்டம்
சமூகங்களுக்கு மத்தியில் இன நல்லுறவை மேம்படுத்தும் வித்தியாலயத்தில் முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் (MWRAF) அனுசரணையுடன் இன்று (06.07.2022) கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தில் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்ட பல்லின சமயங்களைச் சேர்ந்த பயனாளிகள் நன்மை அடையும் வகையில் ஐந்நூறு மரக் கன்றுகளை நடும் வேலைத் திட்ட அங்குரார்ப்பண நிகழ்வு கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபரும், முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி செயல் முன்னணியின் (MWRAF) நிகழ்ச்சித் திட்ட இணைப்பாளருமான AGM. றிஷாத் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட விவசாய பாடவிதான உத்தியோகத்தர் SH.நிஹார், மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரியின் விரிவுரையாளர் அன்ஸார் மௌலானா,கல்முனை சமுர்த்தி மகாசங்க முகாமைத்துவ பணிப்பாளர் S. பரீரா, கல்முனைக்குடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் M.புவிராஜ் விவசாயப்போதனாசிரியர் B. திருத்திக்கா, ஆசிரியர் DKM. மௌசீன், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் IL. அர்சுதீன், சமுர்த்தி சமுதாய அடிப்படை சங்கத் தலைவர் S.காலித் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.






